கழக தோழர்களுக்கு கழக மாநாடுக்கு எப்படி வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த - தலைவர் விஜய்
விஜயின் அரசியல் காட்சி மாநாடு வருகிற 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறவிருக்கிறது. விஜயின் ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் விஜய் மக்கள் மன்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள் என பல லட்சம் பேர் இதில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மற்றும் நடர் விஜய் தனது க்ஷ தளத்தில் தனது கழக தோழர்களுக்கு கழக மாநாடுக்கு எப்படி வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,
வணக்கம். பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன். காரணம்,எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம்.ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன். அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும்.
போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மேலும் படிக்க : நடிகர் விஜயின் அரசியல் பற்றி இயக்குனர் ஆர்கே செல்வமணி ஓபன் டாக்
உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன்.நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள்.அப்படித்தான் வரவேண்டும்.
நாளை (27-10-2024) நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம். தோழமையுடன், உங்கள் விஜய்
என்று தனது x தளத்தில் ட்வீட் செய்துள்ளார். தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
0 Comments